கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கான விசேட திட்டம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தின் நிர்மாண பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

180,000 சதுர அடி பரப்பிலான இந்த பயணிகள் முனையத்தில் 2 பயணிகளுக்கான பாலங்களும் அமைக்கப்படவுள்ளன.இந்த பயணிகள் முனையம் ஊடாக வருடத்திற்கு மேலதிகமாக 9 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக  இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்திற்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் 62 பில்லியன் யென் நிதியை முதலீடு செய்வதாக  குறிப்பிடப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435