மோட்டார் வாகன சாரதிகளின் பாதுகாப்புக்கு UAE யில் புதிய திட்டம்

மோட்டார் வாகன சாரதிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை குறுந்தகவல் மூலமாக அனுப்ப அபுதாபி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மூடுபனி, மோசமான காலநிலை மற்றும் விபத்துக்கள் தொடர்பான தகவல்களை குறுந்தகவல் ஊடாக அதிவேக பாதையை பயன்படுத்தும் மோட்டார் சாரதிகள் மற்றும் அப்பாதைகளுக்கு அருகாமையில் வசிப்போருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேவையற்ற வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இப்புது திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அபுதாபி பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அபுதாபியில் நேற்று பனிமூட்டமாக காணப்படுவதாகவும் எனவே அவதானத்துடன் வேகத்தை குறைத்து மோட்டார் வாகனங்களை செலுத்துமாறும் ஸ்மார் கோபுரங்களூடாக பொலிஸார் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

இப்புதிய நடைமுறையை எவ்வாறு சரியான முறையில் பயன்படுத்துவது என்பது தொடர்பில் பயனாளர்களுக்கு பயிற்சி செயலமர்வை நடத்த தேசிய அவரச, நெருக்கடி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435