மோட்டார் வாகன சாரதிகளை எச்சரிக்கும் UAE வானிலை அவதான நிலையம்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ச்சிாய பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்பதால் மோட்டார் வாகன சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

நாளை (15) தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி திங்கட் கிழமை வரையில் டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் இக்காலநிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக சுமார் 1000 மீற்றருக்கும் குறைவாகவே தௌிவாக காணக்கூடியதாக இருக்கும் என்பதனால் அவதானத்துடன் வாகனங்களை ஓட்டுமாறு மோட்டார் வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் இந்நிலை நாளை (15) தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரை தொடரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை (18) தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழையுடன் கூடிய குளிர் காற்று வீசக்கூடும் என்றும் மணல் மற்றும தூசு காரணமாக வீதிகள் தௌிவாக காணப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றமையினால் மோட்டார் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக செயற்படுமாறும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435