வளைகுடாவில் தேசியமயமாக்கப்படும் தொழில்வாய்ப்பு வீதம் அதிகரிப்பு

2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார்.

சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவற்றை தொடர்ந்தது 2019 ஆம் ஆண்டில் மேலும் வேலைவாய்ப்புகள் தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் எமிரேட் குறிப்pட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளை தேசியமயமாக்குவது துபாயில் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஷேக் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்hhர்.

2018 ஆம் ஆண்டின் விளைவு மற்றும் 2019க்கான திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளின் உள்ளூர்மயமாக்கல் 200மூ அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் அதனை இரட்டிப்பாக்க நாங்கள் முயற்சி செய்வோம் என ட்விட்டரில் கூறி உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் வாழ்க்கை மற்றும் வேலை செய்து வருகின்றனர். துபாயின் ஆட்சியாளர்கள் 1999ம் ஆண்டில் வேலைவாய்ப்பை தேசியமயமாக்கல் ஆரம்பித்திருந்த போதிலும் அது பல ஆண்டுகளாக அது குறைந்தபட்சமாக இருந்தது.

இருப்பினும் 2008 நிதியியல் நெருக்கடி பொருளாதாரத்தை பரவலாக்குவதற்கும் தனியார் துறைகளில் வேலைகளை தேர்ந்தெடுப்பதற்கு அதிக விகிதம் வேலைவாய்ப்பு தேசியமயமாக்கப்பட்டது.

வளைகுடா அரபு குடிமக்கள் குறைந்த ஊதியங்கள் மற்றும் கடுமையான வேலை போன்ற காரணங்களால் தனியார் துறைகளில் இணைய விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படுகின்றமையினால், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் தொழிலாளர்களின் தொழில்வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435