விமானநிலையம் திறப்பு மேலும் தாமதமாகலாம்

நாட்டு மக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை விமானநிலையம் திறக்கப்படாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை ஏலவே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுகிறவர்கள் குறித்து கடற்படையினர் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றனர். நாட்டில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சிறந்த முறையில் காணப்படுகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435