வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் PCR பரிசோதனை கட்டணம் அறவிட திட்டம்

எதிர்காலத்தில் நாட்டுக்கு வரும் பயணிகளிடம் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை அறவிடுவதற்கு அவதானம் செலுத்தப்படுகிறது.

இந்தப் பரிசோதனைக்காக ஒருவருக்கு 6000 முதல் 8000 ரூபாய் வரையில் செலவாகும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ரஜீவ் சூரியஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் அந்த செலவை ஏற்பது மிகவும் கடினமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியின் பின்னரே விமான நிலையம் திறக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435