வௌிநாடுகளில் இருந்து 220 இலங்கையர் தாய்நாட்டுக்கு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 220 இலங்கையர்கள் இன்று  (11) நாடு திரும்பியுள்ளனர்.

கட்டார், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து அவர்கள் இலங்கை திரும்பினர்.

கட்டாரில் இருந்து இன்று அதிகாலை 1.30 மணியளவில்  42 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேநேரம், இன்று மதியம் 12.15 அளவில் மாலைத்தீவில் இருந்து 178 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களை விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435