வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு ஆங்கில மொழி அறிவு கட்டாயமானது

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அனைத்து பணியாளர்களுக்கும் ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பணியாளர்களுக்கு கூடுதல் பெறுமதி சேர்ப்பதற்காக ஆங்கில மொழி அறிவு கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன் ஊடாக பணியாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பல்வேறு நாடுகளுக்கு மேலும் பல இலங்கை பணியாளர்களை அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அதன் ஊடாக நாட்டுக்கு பாரியளளவிலான அந்நிய செலாவணிகளை பெற்றுக் கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435