175 பேர் நேற்று குணமடைந்தனர்: நாடு திரும்பிய 4 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் 5 பேருக்கு நேற்று (28) கொவிட்-19 தொற்று உறுதியானது.

சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணிய ஒருவருக்கும். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய 4 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 175 பேர் நேற்று பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இதுவரையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் குணமடைந்த தினமாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.

503 பேர் நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435