UAE, கத்தாரில் இருந்து நாடுதிரும்பிய 349 இலங்கையர்கள்

கொவிட்-19 காரணமாக நாடுதிரும்ப முடியாமல், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கத்தாரில் சிக்கியிருந்த 349 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாபில் சிக்கியிருந்த 335 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே-648 ரக விமானத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேநேரம், கத்தார் – டோஹாவில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள், கத்தார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர்-668 ரக விமானத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி. தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைப்பதற்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435