கொரோனாவால் மூளை பாதிக்கப்படும் அபாயம்

கொரோனா வைரஸால் மூளை சேதமடையும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரி விஞ்ஞானிகளே கொரோனா வைரஸால் மூளை சேதமடையும் அபாயம் குறித்து எச்சரிக்கின்றனர்.

யு.சி.எல் ஆராய்ச்சியாளர்கள் தற்காலிக மூளை செயலிழப்பு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு அல்லது அவர்களின் மூளையில் பிற கடுமையான பாதிப்புகளுக்கு ஆளான 43 நோயாளிகளை ஆய்வு செய்தனர்,

மேலும் இந்த நோய் மனநோய் மற்றும் மயக்கம் உள்ளிட்ட கடுமையான நரம்பியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

ஆய்வில் ஒன்பது நோயாளிகளுக்கு acute disseminated encephalomyelitis (ADEM) எனப்படும் அரிய நிலை இருப்பது கண்டறியப்பட்டது, இது பொதுவாக குழந்தைகளில் காணப்படுகிறது மற்றும் வைரஸ் தொற்றுகளால் ஏற்ப்படலாம்.

ADEM ஆல் வழக்கமாக ஒரு மாதத்திற்கு ஒரு நோயாளி மட்டுமே பாதிக்கப்படுவதை அவர்கள் பார்த்து வந்ததாகவும், ஆனால் அவர்கள் ஆய்வை நடத்தும்போது வாரத்திற்கு ஒருவர் என கவலை ஏற்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என என்று ஆய்வு மேற்கொண்ட குழு கூறியது.

இந்த நோய் சில மாதங்களாக மட்டுமே உள்ளது, கொரோனாவின் நீண்ட கால பாதிப்பினால் என்ன ஏற்படக்கூடும் என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய ரோஸ் பேட்டர்சன் கூறினார்.

ஆரம்பகால நோயறிதல் நோயாளியின் விளைவுகளை மேம்படுத்தும் என்பதால், சாத்தியமான நரம்பியல் விளைவுகளைப் பற்றி மருத்துவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435