கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கான அறித்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் தமது பயணச்சீட்டுக்களை பாதுகாப்புத் தரப்பினரிடம் காட்டி உறுதி செய்த பின்னரே அனுப்பப்படுகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

நேற்று (05) நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை அடுத்து அப்பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியமையை அடுத்து முப்படையினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் ஊரடங்குசச் சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435