மதுபானம் தயாரித்த நபர் சவுதியில் கைது

வீட்டில் மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்த ஆசிய நாட்டுப் பிரஜையொருவரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அல் ராஸ் நகரில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையொன்றின் போது இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போது பெரும் எண்ணக்கையான போத்தல்கள், மதுபானம் நிறைந்த பீப்பாய்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று உள்நாட்டுப் பத்திரிகையான அஜல் அரபிக் டெய்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மதுபானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில் மதுபானம் தயாரித்தமை, விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435