ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை இரு தினங்களில் பெற முடியும் என்று அந்நாட்டு மனித வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
வர்த்தக உரிமையாளர்கள் பணி அனுமதியை ஸ்மார் குழுச்சேவையினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதனூடாக இ அனுமதிப்பத்திரத்தை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.
அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்கான விண்ணப்பங்களை திணைக்களத்தின் செயலி அல்லது இணையதளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும். அனுமதி பத்திரம் வழங்குவதற்கு 24 சேவை வழங்கப்படுவதுடன் தொழில்வழங்குநர் உரிய தகவல்களை அனைத்தையும் பூரணப்படுத்தியிருப்பின் 48 மணி நேரத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில், பணி அனுமதியினை அந்நாட்டு மனித வள திணைக்களம் மற்றும் அமீரகத்தின் வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது தலைமையகம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. மனிதவள திணைக்களத்தின் பணி அனுமதி பெறுவதன் மூலம் செயல்முறை தொடங்குகிறது. பணி அனுமதிப்பத்திரம் வௌியான தினத்தில் இருந்து இரண்டு மாதங்கள் நாட்டில் நுழைந்து வேலைவாய்ப்புக்காக தங்க இப்பணி அனுமதிப்பத்திரத்தினூடாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.