இஸ்ரேல்- இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதற்கட்டமாக 50 பணியாளர்களை சேவைக்கு அமர்த்தப்படவுள்ள இவ்வொப்பந்தத்தில் இலங்கை சார்பாக பணியகத்தின் தலைவர் ஆர்.கே.ஒபேசேக்கரவும் இஸ்ரேல் சார்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர் டெனியல் காமன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இச்சேவையில் பணியாளர்களை இணைத்துக்கொள்வதற்காக தற்போது முகவர் நிலையங்களில் அறவிடப்படும் கட்டணத்தை விட குறைவான கட்டணமே அறிவிடப்படவுள்ளதாகவும் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் இஸ்ரேல் அரச நேரடியாக கவனம் செலுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றியளித்த பின்னர் பணியில் இணைத்துக்கொள்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இஸ்ரேல் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி பிரதானி திருமதி. டனா குர்ஸ், கவன்சிலர் சிவ் பராக் பிலாவுஸ், முதல் செயலாளர் அஸாவ் மோரன், ஆகியோரும் இலங்கைச் சார்பாக அமைச்சின் செயலாளர் ஜி.எஸ். வித்தானகே, பணியகத்தின் பதில் பணிப்பாளர் உபுல் தேசப்பிரிய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் தலைவர் லஷ்மன் அபேகுணவர்தன, பணியகத்தின் முகாமையாளர் கே.ஓ.டீ. டீ பெர்ணாண்டோ, ஆலோசகர் பத்மினி ரத்னாயக்க, மற்றும் மேலதிக முகாமையாளர் வன்சேக்கர ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த பிரதிநிதிகளுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435