கனடா தேசிய ரயில் சேவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

கனடா தேசிய ரயில் சேவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (19) ஆரம்பிக்கப்பட்ட இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது 72 மணித்தியாலங்களுக்கு தொடரும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ஊழியர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உரிய அதிகாரிகள் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இப்பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் சுமார் மூவாயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கனடாவில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள், எண்ணெய் மற்றும் சோள மா என்பன துறைமுகத்திற்கு ரயில் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435