குவைத்தில் வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு 5 வீத வரி

குவைத்தில் வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு 5 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் பணியாற்றும் சுமார் 3 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த வருடம் மட்டும் சுமார் 19 பில்லியன் நிதியை தத்தமது நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இது அந்நாட்டின் வருடாந்த வரவுசெலவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியளவு ஆகும்.

இவ்வாறு செய்யப்படும் அதிக வெளிநாட்டு பணப்பரிமாற்றத்தினூடாக நாட்டுக்கு வருமானத்தை ஈட்டும் நோக்கிலேயே இவ்வாறு 5 வீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனூடாக நாட்டுக்கு 20 மில்லியன் குவைத் டினார் நாட்டு வருமானமாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 100 டினாருக்கு குறைவான நிதி பரிமாற்றத்திற்கு 2 வீதமும் 100-499 வரையான நிதிக்கு 4 வீத வரியும் 500க்கு அதிக நிதிப் பரிமாற்றத்திற்கு 5 வீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

வரியேய்ப்பில் ஈடுபடும் நபர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கவும் அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இந்நாட்டுக்கு அனுப்பும் பணத்திற்கு மேலதிக பணமும் செலுத்தப்படுவது அவசியமாகும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435