குவைத்தில் 573 வௌிநாட்டுத் தொழிலாளர் கைது

குவைத் தொழிலாளர் சட்டவிதிகளை மீறி வீட்டுப் பணியாளர்களாக பணிபுரிந்த 573 வௌிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு மனிதவலு மற்றும் உள்நாட்டு விசாரணை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தொழில்வழங்குநர்கள் அவர்களை மனித கடத்தலினூடாக குவைத்துக்கு அழைத்து வந்திருக்கலாம் என்று அவ்வதிகாரசபை சந்தேகம் வௌியிட்டுள்ளது.

ஏப்ரல் மாத ஆரம்ப பகுதியில் இருந்து நடத்தப்பட்ட தேடுதல்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றிய நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் ஜஹ்ரா பகுதியிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரால்? எவ்வாறு? எவ்வளவு பணம் கொடுத்து குவைத்துக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435