ஆஸியிலிருந்து மீள அனுப்பப்பட்ட 20 இலங்கையர்கள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 20 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இயந்திர படகின் மூலமாக அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஆஸி. பாதுகாப்புப் படையினரால் இவ்விலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இலங்கையிலிருந்த சென்றுள்ளனர் என்றும் அவர்களில் சிறு குழந்தையும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து வருடங்களின் பின்னர் ஆஸிக்கு சென்ற முதலாவது இலங்கையர்கள் இவர்களாவர். 2013ம் ஆண்டு தொடக்கம் ஆஸி நோக்கிச் சென்ற 186 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435