டுபாயில் 2 பிரித்தானிய நீச்சல் பயிற்றுவிப்பாளர்களுக்கு சிறை

டுபாயில் 5 வயது சிறுவன் தவறுதலாக நீச்சல் தடாகத்தில் விழுந்த இறந்ததையடுத்து இரு பிரித்தானிய நீச்சல் பயிற்றுவிப்பாளர்களுக்கு 3 வருட சிறைதண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மைக்கல் ஸ்மித் என்ற 31 வயதான பயிற்றுவிப்பாளர் மற்றும் 22 வயதான ஸ்டீபன் ஜோன் என்ற பயிற்றுவிப்பாளர் ஆகியோரே இம்மூன்று வருட சிறைத்தண்டனைக்குள்ளாகியுள்ளனர்.

பெல்ஜிய நாட்டவரான பெஞ்சமின் வான் டின் பேர்கி என்ற 5 வயது சிறுவன் டுபாய் ரீஜென்ட்ஸ் சர்வதேச பாடசாலையில் நீச்சல் பயிற்சிக்காக வந்திருந்த சமயத்தில் தவறுதலாக நீச்சல் தடாகத்தில் விழுந்த உயிரிழந்துள்ளார்.

சிறுவன் தடாகத்தில் விழுந்தவுடன் காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதும் போகும் வழியில் சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435