பணப்பரிமாற்றத்திற்கு குவைத்தில் புதிய சட்டதிட்டங்கள்

குவைத் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நிதிபரிமாற்றம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 3000 டினாருக்கு அதிகமான தொகைக்கும் அதிகமான பணப்பரிமாற்றத்திற்கு அந்நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பதை உறுதி செய்வது அவசியம்.

நாட்டு எல்லைகளைக்கடந்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஆசிய மற்றும் அரபி பிரஜைகள் ஈடுபடுவதை தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்நாட்டு கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவ்வாறு பண மூலம் தொடர்பில் உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் 106/2013 சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம்.

மேலும் நன்கொடை சேவைகளுக்காக பணம் சேகரிப்பதற்கும் புதிய சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை புலம்பெயர் தொழிலாளர்களாகிய நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுடன் பணியாற்றும் ஏனைய நன்பர்களுக்கும் இது பற்றி தெளிவுபடுத்துங்கள். இதனூடாக தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435