வீட்டுப்பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த எகிப்து பிரஜை கைது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரியும் பிலிப்பைன் நாட்டுப் பெண்ணை வல்லுறவுக்குற்படுத்திய எகிப்து நாட்டுப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.


பொது குப்பைத் தொட்டியில் கழிவுகளை போடச் சென்றபோதே குறித்த வீட்டுப் பணிப்பெண் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அப்பிரதேசத்தில் இரகசிய கமராவை பொலிஸார் பொருத்தி வைத்துள்ளனர். சம்பவம் நடந்த சில தினங்களில் குறித்த பெண் மீண்டும் கழிவுகளை வீச பொதுக் குப்பைத் தொட்டிக்கு சென்றோபோது அந்நபர் மீண்டும் வல்லுறவுக்குற்படுத்த முயன்றுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் உடனடியாக குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பொது குப்பைத் தொட்டியில் கழிவுகளை வீச வரும் பெண்களை குறி வைத்து வல்லுறவுக்கு முயல்வதாக அந்நபர் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435