சுகாதார பணியாளர் சங்க பிரதிநிதிகள்- அமைச்சர் விரைவில் சந்திப்பு

தற்போது அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள உதவி மருத்துவர்கள், தாதியர், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக உதவி மருத்துவர்கள், தாதியர், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் சுகாதாரதுறையின் 17 சேவைகளைச் சார்ந்த 50,000 அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சேவை நாடி வரும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் அவதியுறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435