சவுதி விபத்தில் தொழிலாளர் பலி!

சவுதி அரேபியாவில் நான்கு மாத சம்பளத்தை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பணியாளர்கள் மீது நிறுவன வேன் மோதியதில் ஒரு தொழிலாளர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியாவில் ஜித்தா நகர் பகுதியில் அமைந்துள்ள மன்னர் அப்துல் அஸீஸ் விமானநிலையத்தின் திட்டமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவன ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நிறுவன அதிகாரி பலத்த காயமடைந்துள்ளார்.

குறித்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நான்கு மாதம் சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே அதனை கேட்டு ஊழியர்கள் கோபத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலைக்கும் நோக்கில் கூட்டத்தை நோக்கி வாகனத்தை ஓட்டிய நிறுவன அதிகாரி இவ்விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த அதிகாரியை தொழிலாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

வேலைத்தளம்/Gulffnews

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435