டுபாய் விமாத்தில் பறக்கும் கர்ப்பிணிப் பெண்களே!

விமானத்தில் பயணிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு திட்டமொன்றை டுபாய் விமான நிலைய அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதனூடாக விமானத்தில் பயணிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

விசேடவிதமாக கர்ப்பிணித் தாய்மார்கள் போன்று நடித்து பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றமையினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு சட்டத்திற்கமைவாக, 32 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை கொண்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டுமே விமானத்தில பயணம் செய்ய முடியும். எந்தவொரு அவசர நேரத்திலும் விமான நிலையத்தில் இருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் பெண்கள் தனிப்பட்ட வைத்தியரினூடாக விமானத்தில் பயணிக்க முடியும் என்ற சான்றிதழை பெற்று வருகின்றனர். எனினும் உண்மை நிலமைக்கமைய அவர்கள் அதற்கு தகுதியற்றவர்கள். இவ்வாறான பெண்களில் சிலருக்கு சில நேரங்களில் விமானத்திலேயே பிரசவம் நடந்து விடுகிறது. அதனால் விமானத்தில் பயணிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தை பின்பற்ற டுபாய் விமான நிலைய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

டுபாய் விமானத்தில் பயணிக்கும் நீங்கள் இது தொடர்பில் அறிந்திருப்பதுடன் ஏனையோரையும் தெளிவுப்படுத்துங்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435