பணியாற்றிய வீட்டில் திருடிய பிலிப்பைன் பணிப்பெண்

பணியாற்றிய வீட்டில் 150,000 தினார் மற்றும் 10,தினார் பெறுமதியான நகைகளை திருடிய குற்றத்திற்காக பிலிப்பைன் நாட்டு பணிப்பெண் ஒருவர் மீது டுபாய் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

30 வயதான குறித்த வீட்டுப் பணிப் பெண் அவருடைய 32 வயதான பாகிஸ்தான் காதலருடன் இணைந்து திருடி விட்டு வீட்டை விட்டு ஒடியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சிய பிரஜையான குறித்த எஜமான், இது தொடர்பில் தெரிவிக்கையில் கடந்த 4 வருடங்களாக குறித்த பெண் தனது வீட்டில் பணிபுரிவதாகவும் இவ்வாண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியே குறித்த பெண் திருடியமை கண்டுபிடிக்கப்பட்டது. நாம் வெளியில் சென்றதும் ஒரு ஆண் வீட்டுக்கு வருவதாக அயலவர் தெரிவித்தார் என்றும் தெரிவித்தார்.

குறித்த பணிப்பெண் மீது திருயமை, அத்துமீறி செயற்பட்டமை மற்றும் காதல் உறவை பேணியமை ஆகியவை குற்றங்களாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவருடைய காதலர் மீதும் குற்றச்செயலில் ஈடுபட்டமை, அத்துமீறி நடந்துக்கொண்டமை, காதல் தொடர்பை வைத்திருந்தமை மற்றும் காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435