கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்ட யாக்கங்களுடனான பேச்சுவார்த்தை

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட யாக்கங்களுடனான பேச்சுவார்த்தை இந்த மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், புதிய கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாத்திடுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு என்பன மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருந்தன.

இதன் அடுத்த கட்டமாக பெருந்தோட்ட யாக்கங்களுடனான சந்திப்புக்கு திகதி கோரப்பட்டிருந்தது.

இதற்கமைய, எதிர்வரும் 17ம் திகதி பெருந்தோட்ட யாக்கங்களுடனான பேச்சுவார்த்தைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும், பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435