தடைசெய்யப்பட்ட வலை பயன்படுத்திய 10 மீனவர்கள் கைது

தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்த மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்கள் மன்னார் தாழ்பாடு மற்றும் கதிரவெலி கடற்பிரதேசத்தில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாழ்பாடு பிரதேசத்தில இரு மீனவர்களும் கதிரவெலி பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பிரதேசத்தில் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட 2 டிங்கி இயந்திரப்படகுகளும் தங்கூஸ் நூலினாலான 5 வலைகளும் கைப்பற்றப்பட்டன.

கதிரவெலி பிரதேசத்திலும் 2 டிங்கி படகுகள் உட்பட மீன்பிடிக்காக பயன்படுத்தப்படும் பல உபகரங்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435