இரண்டாம் கட்ட நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு அடுத்த மாதம்

இரண்டாம் கட்டமாக வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 494 பேருக்கு நியமனம் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ஆம்¸ 20ஆம் திகதிகளில் நடத்தப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (29) கல்வியமைச்சில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட மாகாண தொண்டர் ஆசிரியர் நியமனம் இந்த நியமனம் தொடர்பாக சுமார் 02 வருடங்களாக பேசி பல்வேநு நடவடிக்கைகளை மேற்க் கொண்டு முதற் கட்டமாக தொண்டர் ஆசிரியர்கள் 182 பேருக்கு நியமன கடிதம் வழங்கபட்டுள்ளது.

இந் நிலையில் இவர்களுக்கு நியமனம் கொடுக்க வேண்டாம் அனைவருக்கும் ஒன்றாக கொடுங்கள் என்றும் தங்களுக்கும் வழங்கமாட்டீர்களா? 182 பேருக்கு மாத்திரம் கொடுத்து விட்டு எங்களை ஏமாற்றி விடுவீர்களா? என்றெல்லாம் கூறி ஆர்பாட்டங்கள் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

வடக்கில் ஆசிரியர் தட்டுபாடு இருந்த யுத்த கலப்பகுதியில் கல்விக்கும் கல்வி அமைச்சுக்கும் உறுதுணையாக இருந்த இந்த தொண்டர் ஆசிரியர்களை நாங்கள் மறக்க மாட்டோம்.

தொண்டர் ஆசிரியர்களை சுற்றுநிறுபத்திற்கு ஏற்ப உள்வாங்குவதில் ஏற்பட்ட சிக்கலும் உள்ளுராட்சி தேர்தலுமே தாமத்திற்கு காரணம்.

இவ்வாறான நிலையில் 182 பேருக்கு முதற் கட்டமாக நியமனம் வழங்குவதை எதிர்ப்பது வடக்கு மக்களின் அவிருத்திக்கு அவர்களே தடையாக இருக்கும் செயலாகும்.

இரண்டாம் கட்ட நேர்முக பரீட்சை முடிந்ததும் உடனடியாக நியமனம் வழங்குவோம். மொத்தமாக 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளன. இவை கட்டாயம் வழங்கப்படும் அது வரை பொருத்திருந்து எந்த பிரச்சனையும் இன்றி நியமனங்களை வழங்க ஒத்தழைக்க வேண்டும் என்று கூறினார்.

இதேவேளை, முதல் கட்டமாக 182 வட மகாண தொண்டர் ஆசிரியர்களுக்கும்; ஓப்பந்த அடிப்படையிலான 142 ஆசியர்களுக்கும் மொத்தமாக 324 நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (28) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435