கட்டுமான ஊழியர்களுக்கு பணியிடத்திலேயே தங்குமிட வசதி

கட்டுமானப் பணிகள் இடம்பெறும் தளங்களிலேயே தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்கான அனுமதியை ஐக்கிய அரபு இராச்சியத்தின் மனித வள அமீரக அமைச்சு வழங்கியுள்ளது.

தொழிலாளர்களுக்கிடையில் பாதுகாப்பான தொலைவை பேணுவதுடன் அச்சுறுத்தலை குறைக்கும் வகையில் இவ்வேற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் தொழிலாளர்களின் போக்குவரத்தினூடாக கொவிட் 19 தொற்று பரவாமல் இருப்பதும் இதன் நோக்கமாகும்.

உள்ளநாட்டு அதிகாரிகள், அமைச்சு மற்றும் மாநகரசபை என்பவற்றுக்கிடையிலான ஒத்துழைப்புடன் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

சட்ட விதிகளுக்கமைய கட்டுமான நிறுவனங்கள் பணியிடங்களில் தங்குமிட வசதிகளை மேறகொள்ளவேண்டும். சமூக இடைவௌி பேணும் வகையிலும் இத்தங்கஞமிடங்கள் அமைக்கப்படவேண்டும். தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு நேரடியாக சென்று பாதுகாப்பு, சுகாதாரமான தங்குமிட வசதிகள் செய்துக்கொடுக்கப்படுகிறதா என கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளையும் மனித வள அமைச்சு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435