மேன் பவர் சேவையாளர்கள் அமைதிப் போராட்டம்

நீர் வடிகாலமைப்பு சபையில் பணியாற்றும் மேன் பவர் சேவையாளர்களை நிரந்தர சேவையாளர்களாக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து இன்று (22) காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இன்று உலக நீர் தினத்தை முன்னிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுதாக நீர் வடிகாலமைப்பு ஒப்பந்த சேவையாளர் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் எஸ்.டி.என்.லீலாரத்ன தெரிவித்துள்ளார்.

உலக நீர் தின நிகழ்வு இடம்பெறும் கொழும்பு தாமரைத் தடாக அரங்குக்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையில் மேன் பவர் சேவையாளர்களாக பலர் உள்ளனர்.

இன்று உலக நீர் தின நிகழ்வு இடம்பெறுகின்ற நிலையில், நாம் அமைதியான முறையில் எமது போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

எம்மை நிரந்தர சேவையாளர்களாக நியமிக்க வேண்டும் என நிர்வாக அதிகாரியிடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் இந்தப் போராட்டத்தின் மூலம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என நீர் வடிகாலமைப்பு ஒப்பந்த சேவையாளர் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் எஸ்.டி.என்.லீலாரத்ன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435